பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்டத்தில் வீடு ஒன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும், நேற்றிரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 45 வயது மதிக்கத்தக்க தாய் (எஸ்.விஜயகுமாரி) மற்றும் 19வயது பெண் (பி.துஷாரா) ஆகிய இருவரின் சடலமும் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் பொகவந்தலாவ பிரதேசத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.