இழந்­த­ நாட்டை மீட்­டெ­டுக்க வேண்டும் என்­பதே எமது ஒரே குறிக்கோள். எட்டு இலட்சம் சனத்­தொகை கொண்ட மக்­க­ளுக்கு கொசோவோ என்ற நாடு உரு­வா­கி­யது போல 10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒரு நாடு உரு­வா­கட்டும் என்று நடிகர் சத்­யராஜ் தெரி­வித்­துள்ளார்.
 
இயக்­குநர் கௌத­மனின் இயக்­கத்தில் இலங்­கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இர­க­சி­ய­மாக தொட­ரப்­படும் கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பை சர்­வ­தேச சமூ­கத்தின் பார்­வைக்கு கொண்டு செல்லும் வகையில் உரு­வான பேர்சுட் ஒப் ஜஸ்டிஸ் (”Pursuit of Justice) என்ற ஆவ­ணப்­படம் சென்னை வட­ப­ழ­னியில் உள்ள ஏ.வி.எம் அரங்கில் திரையி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வில், கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில்,சரி­யான நேரத்தில் இந்த ஆவ­ணப்­படம் வெளியே கொண்டு வரப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளுக்­ககு எதிரான கொடு­மைகள் இவ்­வ­ளவு நடந்த பின்பும் ஒரே நாடு என்று சொல்­வதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. எங்­களைப் பொறுத்­த­வ­ரைக்கும் இழந்த நாட்டை மீட்­டெ­டுக்­கிறோம்.

உலகம் தோன்­றின போதே நாடுகள் கிடை­யாது. சில நாடுகள் ஆயிரம் வரு­டங்­க­ளுக்கு முன்­னாலும், சில நாடுகள் நூறு வரு­டங்­க­ளுக்கு முன்­னாலும் வந்­த­வையே. ஒரு நாடு பல நாடு­க­ளாக பிரி­கி­றது.


பல நாடுகள் சேர்ந்து ஒரு நாடாக மாறு­கி­றது. ஒரு எட்டு இலட்சம் சனத்­தொகை கொண்ட கொசோவோ நாடும் இப்­போது தானே உத­ய­மா­னது. அதே போல் 10 கோடி தமி­ழ­னுக்கு தமி­ழீழம் என்ற ஒன்று வந்­து­விட்டு போகட்டும். அது புது நாடல்ல. இழந்த நாட்டை நாம் மீட்­டெ­டுக்­கின்றோம்.

எல்லாம் நடந்து முடிந்து விட்­டது. இனி என்ன செய்ய முடியும் என்று நாம் எல்­லா­வற்­றையும் கைவிட்டு விட முடி­யாது. தமி­ழீழ விடு­தலைப் புலிகள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கிப் போரா­டி­னார்கள். 

இதை விட படைப்­பா­ளிகள் கவி­தைகள், நாட­கங்கள் ஊடாக கூட போரா­டு­கின்­றார்கள்.

இந்­திய சுதந்­திர போராட்­டத்தில் பகத்சிங் ஆயு­த­மேந்­தியும், காந்­தி­ய­டிகள் அற வழி­யிலும், பார­தியார் தேச விடு­தலைக் கவி­தைகள் ஊடா­கவும் போராடினார்கள். ஆனால், வெள்ளைக்காரன் பார்வையில் காந்தியும் தீவிரவாதிதான், பகத்சிங்கும் தீவிரவாதி தான், பாரதியும் தீவிரவாதிதான். அதேபோல் தான் இன்றும் நடக்கிறது என்றார்