தமிழினிஅவர்கள் தமிழ்மக்களின் இதயத்தில் என்றுமே நிலைத்திருப்பார் October 18, 2015 News தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை முன்னாள் பொறுப்பாளர் சிவகாமி சிவசுப்பிரமணியம் என்ற தமிழினி இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 43வயதாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் மரணமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரின் பின்னர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தமிழினி 2013 ஆம் ஆண்டில்வவுனியாவில்வைத்து கண்காணிப்புடன் விடுவிக்கப்பட்டார் . இந்தநிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது. இதனையடுத்து நோயின் கடும் தாக்கம் காரணமாக அண்மையில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாத காரணத்தினால், அவரின் கணவரான ஜெயக்குமாரின் கடவுச்சீட்டைக் கொண்டே அனுமதி பெறப்பட்டது. இதன் அடிப்படையில் வைத்தியசாலை பதிவில் சிவகாமி ஜெயக்குமார் என்று பதியப்பட்டுள்ளது. தமிழினி 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் தமிழ்மக்களின்விடுதலைக்காகஅயாராதுஉழைத்தஒரு உன்னதமான விடுதலைப்போராளி தமிழினிஅவர்கள் தமிழீழத்தேசியத்தலைவரின் சிந்தனைக்குசெயல்வடிவம்கொடுத்து இராணுவரீதியிலும் இறுதியாக அரசியல்ரீதியாகவும் அரும்பாடுபட்ட தமிழினிஅவர்கள் தமிழ்மக்களின் இதயத்தில் என்றுமே நிலைத்திருப்பார்