எம் தினத்தின் விடுதலைப் போராட்டத்தின் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த நாட்டுப்பற்றாளர் துரைரத்தினம் முரளிகரன் (முரளி) அவர்களுக்கு வீர வணக்கம்.

கனடா நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த போதிலும், தேசிய ஊடகப் பணியில் தம்மை ஒரு தொண்டராக இணைத்துக் கொண்டவரே!

அறிவுச்சோலையில் பணியாற்றியதனூடாக தமிழ் மொழியிலும் தாய் நாட்டிலும் பற்று வைத்து தேசப்பணியாற்றியவரே!

பல்வேறு இடர்களைச் சந்தித்த வேளையிலும் கொண்ட கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் விடுதலைப் பணியை சிறப்பாகச் செய்தவரே!

தனக்கென ஏதும் எண்ணாது தமிழரின் நலத்தை மட்டுமே எண்ணி மிகவும் எளிமையாக வாழ்ந்த மனிதரே!

2005ம் ஆண்டிலிருந்து இறுதிவரை கியூபெக் மாநிலத்தின் தேசியச் செயற்பாட்டுத் தலைமையாளராக மனச்சுத்தியுடன் பணியாற்றி வந்தவரே!

தமிழீழக் கனவுடன் வாழ்ந்த தேசப்பற்றாளரே! தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரே!

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு மனங்கலங்கி நிற்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும் தங்கள் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு துயரிலும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
டென்மார்க் கிளை.

—————————————————————

சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பினால் தனது சிறு வயதிலேயே தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்விட மொழியில் தனது கல்வியைத் தொடர்ந்த அதேவேளை, தாய் மொழியையும் மாலதி தமிழ் கலைக்கூடத்தில் பன்னிரண்டாம் ஆண்டுவரை கற்று தேர்ச்சிபெற்றிருந்தார்.

இவர் அரசியல் விஞ்ஞான பட்டப்படிப்பை முடித்து தனது படிப்பின் மூலம் எமது மக்களும் தேசமும் விடுதலைபெற எண்ணினார்.

புலம்பெயர் இளையோருக்கு முன்னுதாரணமாக கேணல் கிட்டு அரசியல் அறிவுக்கூட பட்டறைகளில் பங்குபற்றி இளையோர் மத்தியில் எமது தேச விடுதலை சார்ந்த தேடுதல்களையும் அறிவூட்டல்களையும் முன்னின்று வழிப்படுத்தினார்.

சிறீலங்கா பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்கள் மூலம் டென்மார்க் நாட்டு அரசியல் பிரமுகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எடுத்துரைத்ததுடன் கேணல் கிட்டு அரசியல் அறிவுக்கூட பரப்புரைப் பிரிவினருடன் இணைந்து ஐரோப்பிய ரீதியிலும் அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டு தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டியதுடன் தமிழர்களின் நிரந்தர தீர்வு தமிழீழம் என தனது அனுபவத்தினூடாக நிறுவினார்.

அத்துடன் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். ஒடுக்கப்படும் இனக்களுக்காக இயங்கும் ஏனைய அமைப்புகளுடனும் சமூகப் பணியாளர்களுடனும் நட்பு ரீதியாக தமிழர்களின் போராட்ட நியாயத்தன்மையினையும் எடுத்துக்கூறிவந்தார்.

இவ்வாறு பல வழிகளில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்த வேளையில் அவரது இழப்பு எமக்கு ஒரு பேரிழப்பாகும்.

அவரது மறைவால் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் பெரும் வேதனையடைவதுடன் அவரது இழப்பால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்