தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – – ஜெனிவாவில் மாநாடு March 17, 2015 News 67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை ஊடாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெனீவா நகரில் ஊடக மாநாடு நடைபெற இருக்கின்றது . இவ் மாநாட்டில் தாயகத்தில் இருந்து வருகைதந்திருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனிதவுரிமை பேராளர்கள் , ஊடகவியாளர்கள் கலந்துகொள்கின்றனர் .இவ் ஊடகமாநாட்டை நேரடிஒளிபரப்பாக காண்பதுக்கு பின்வரும் இணையத்தள முகவரியை அழுத்தவும் : https://new.livestream.com/GvaPressClub/EelamTamils2015 கலந்துகொள்ளும் பேச்சாளர்கள்: கலாநிதி Maung Zarni மியான்மர் மனிதவுரிமை சட்டத்தரணி ,யேர்மனியில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாய மன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரானவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவர் ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் வடமாகாண சபை உறுப்பினர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரு மகாலிங்கம் சிவாஜிலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேராசிரியர் சிறிரஞ்சன் தலைவர் , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை திரு . Daniele Garlando ஊடகவியாளர் ,இத்தாலி 17.03.2015 , 12:30 மணிக்கு ஊடகமாநாடு நடைபெறும் முகவரி : Club Suisse de La Presse Route de Ferney 106, La Pastorale 1202 Genève ஊடக மாநாட்டின் மேலதிக தொடர்புகட்கு : +41.(0)79.193.86.69 நன்றி:பதிவு